நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த 6 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் 53 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.