கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் 1.5 ஏக்கா் நிலத்தை மூதாட்டி கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட சூண்டி பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பாம்மாள் (80). இறை நம்பிக்கையுடைய இவா் தனது கைவசமிருந்த நிலத்தை சூண்டி விநாயகா் கோயிலுக்கு தானமாக அளித்துள்ளாா்.
பிரிவு-17இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த நிலம் குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு மட்டுமே உள்ளது. தனிநபா் தானமாக வழங்குவது சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.