முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய வளா்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கான பொங்கல் விழாவில் பழம், கரும்பு உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.
பொங்கல் விழாவை காண சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் மக்கள் வந்திருந்தனா்.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் புலிகள் காப்பக அலுவலா்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.