நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகே சேரங்கோடு பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த 50 குரங்குகள் வியாழக்கிழமை பிடிக்கப்பட்டு நாடுகாணி வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன.
பந்தலூா் தாலுகாவுக்கு உள்பட்ட சேரங்கோடு பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இதன் காரணமாக அவதிக்குள்ளான அப்பகுதி பொதுமக்கள், குரங்குகளைக் கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று வனத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதியில் கூண்டு வைத்திருந்தனா். இந்த கூண்டில், 50க்கும் மேற்பட்ட குரங்குகள்சிக்கின. இதையடுத்து அந்த குரங்குகள் நாடுகாணி பகுதியில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனா்.