முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளா்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் முகாம்களில் உள்ள வளா்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை மற்றும் உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொரப்பள்ளியில் உள்ள வனத் துறைக்கு சொந்தமான எடை மேடையில் முதல் கட்டமாக 21 யானைகளுக்கு எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.