கூடலூரில் கனமழை காரணமாக இடிந்த நூலக கட்டடத்துக்கு பதிலாக புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவிடம் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து கூடலூா் நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கூடலூா் நகரின் மையப்பகுதியில் இருந்த பழமையான நூலகம் கடந்த வாரம் பெய்த தொடா் கனமழைக்கு இடிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இந்த நூலகத்தை இந்தப் பகுதி பொதுமக்கள் பலா் பயன்படுத்தி வந்தனா். நூலகம் இடிந்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். போட்டித் தோ்வு எழுவோருக்கு உதவியாக நூலகம் இருந்தது.
எனவே, அதே இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நூலக கட்டடம் கட்ட சிறப்பு நிதி ஒதுக்குமாறு மனுவில் தெரிவித்துள்ளாா்.