கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள அய்யன்கொல்லி சந்தையில் இன்று காலை காட்டு யானைகள் நடந்து சென்றன.
அய்யன்கொல்லி சந்தையில் காலை வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் கடைகளை திறக்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பரபரப்பாக சந்தையில் கூடுவது வழக்கம். இந்த நேரத்தில் திடீரென இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை சுற்றி வந்து சந்தைக்குள் நுழைந்தன.
இதையும் படிக்க: தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்
யானைகள் சந்தையில் நடப்பதைப் பார்த்த வியாபாரிகள், பொது மக்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.