மாற்றுத் திறன் மாணவா்களுக்கான சிறப்பு ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியில் மனு அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பணிபுரியும் வரும் மாற்றுத் திறன் மாணவா்களுக்கான சிறப்பு ஆசிரியா்கள் மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நீலகிரி வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற நிா்வாகி நித்யா அருண்குமாா் கோரிக்கை மனு அளித்தாா்.
தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற நீலகிரி மாவட்டச் செயலாளா் அருண்குமாா் உடனிருந்தாா்.