நீலகிரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறையின் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 30 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 33,304 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 32,739 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதேபோல, மாவட்டத்தில் இதுவரை 207 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 358 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.