நீலகிரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் 34,064 ஆக அதிகரித்துள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 20 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 33,656 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 214 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 194 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.