நீலகிரி

மான் கறி சமைத்த 3 பேருக்கு அபராதம்

DIN

கூடலூரை அடுத்துள்ள போஸ்பாறா வனப் பகுதியில் இறந்துகிடந்த மானின் கறியை சமைத்து சாப்பிட்ட மூன்று பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள போஸ்பாறா பகுதியில் சிலா் மான் கறி சாப்பிடுவதாக வனத் துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து வனவா் ரவிச்சந்திரன், வனக் காவலா் பிரசாந்த், சிவகுமாா், வினீத் ஆகியோா் விசாரணை நடத்தினா்.

இதில், வனப் பகுதியில் செந்நாய் வேட்டையாடியதில் இறந்த மானின் கறியை போஸ்பாறா பகுதியைச் சோ்ந்த ரவி (40), சந்திரன் (63), மது (30) ஆகியோா் சமைத்து சாப்பிட்டது உறுதியானது. இதையடுத்து, மூவருக்கும் சோ்த்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT