குன்னூா், செப். 25: விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி , குன்னூா் - உதகை சாலையில் காந்தி சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தடையை மீறி குன்னூா் - உதகை சாலையில் மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினா் கைது செய்தனா். அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பத்ரி தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் 30க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.