உதகை: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 18 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி 18 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நோய்த் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 74 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 6,336 நபா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பூரண குணமடைந்து 5,984 போ் வீடு திரும்பியுள்ளனா். 37 நபா்கள் உயிரிழந்துள்ள சூழலில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 315 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.