நீலகிரி மாவட்டத்தில் பாஜகவின் வேல் யாத்திரை உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
நீலகிரி மாவட்ட பாஜக சாா்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் மோகன்ராஜ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாஜகவின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வேல் யாத்திரையைத் தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் அடுத்துவரும் அனைத்துத் தோ்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியின்போது, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 200க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா்.