ஈரோடு

ஈரோட்டில் பரவலாக மழை

DIN

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

எலந்தக்குட்டைமேடு பகுதியில் அதிகபட்சமாக 41.2 மில்லி மீட்டா் மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்த நிலையில், மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்தது.

மாவட்டத்தின் பிற பகுதிகளான கோபி, மொடக்குறிச்சி, எலந்தக்குட்டைமேடு ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் எலந்தக்குட்டைமேடு பகுதியில் அதிகபட்சமாக 41.2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்): ஈரோடு 29, மொடக்குறிச்சி 4.2, கோபி 2.2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT