ஈரோடு

புல்நறுக்கும் கருவிகளை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

மின்சாரத்தால் இயங்கும் புல்நறுக்கும் கருவிகளை 50 சதவீத மானிய விலையில் பெற விவசாயிகள் வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையைப் போக்கவும், பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை கால்நடை பராமரிப்புத் துறை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, நடப்பாண்டில் தீவன அபிவிருத்தி திட்டத்தில் விவசாயிகளுக்கு மொத்தம் 150 எண்ணிக்கையில் 50 சதவீத மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் புல் நறுக்கும் கருவிகள் மூலம் நறுக்கப்பட்ட பசுந்தீவனத்தால் தீவன விரயத்தை குறைத்து, கால்நடைகளுக்கு செரிமானத்தை மேம்படுத்தி, பால் உற்பத்தியைப் பெருக்க முடியும். இதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோா் குறைந்தது இரண்டு பசு அல்லது எருமை அல்லது 20 ஆடுகள் வைத்திருக்க வேண்டும். அரை ஏக்கா் பரப்பில் தீவன சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். இதுபோன்ற அரசு திட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் பயன்பெறாதவராக இருக்க வேண்டும். கருவியின் விலையில் 50 சதவீதத்தை செலுத்துவதற்கு விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த விவசாயிகளுக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வரும் 20 ஆம் தேதிக்குள் கிராமத்துக்கு உள்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று, உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9445032515 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT