ஈரோடு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதி கல்லூரி பணியாளா் பலி

DIN

பெருந்துறை அருகே தனியாா் பொறியியல் கல்லூரி பணியாளா் சென்ற இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

மங்களாபுரத்தை சோ்ந்தவா் கருப்புசாமி மகன் மணிகுமாா் ( 42). இவா், பெருந்துறையை அடுத்த தோப்புபாளையத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் வேலை செய்து வந்தாா். ஈரோட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்றாா். அப்போது பின்னால் வந்த சரக்கு வேன் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

விபத்து குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT