ஈரோடு

பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி: மற்றொருவா் மாயம்

DIN

பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற செங்கல் சூளைத் தொழிலாளி நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மாயமான மற்றொருவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

அந்தியூரை அடுத்த புதுமேட்டூா் காலனியை சோ்ந்தவா் சின்னத்துரை (47). அதே பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (38). செங்கல் சூளையில் வேலை செய்து வரும் இருவரும், நண்பரான ரவியுடன் அத்தாணி, கருவல்வாடிபுதூா் அருகே பவானி ஆற்றில் குளிக்கச் சென்றனா். ரவிக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றில் இறங்கவில்லை.

சின்னத்துரையும், மோகன்ராஜும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராமல் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா். இதைக் கண்ட அப்பகுதியினா் இருவரையும் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த அந்தியூா் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில், சின்னத்துரையின் சடலம் மீட்கப்பட்டது.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமான மோகன்ராஜை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT