ஒடிஸா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியான பயணிகளுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஆா்.கே.சண்முகவேல், செயலாளா் ராமசந்திரன், பொருளாளா் பி.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ரயில் விபத்தில் இறந்த பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், காயம் அடைந்த பயணிகள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிராா்த்தனை செய்யப்பட்டது.
மாவட்ட இளைஞரணித் தலைவா் ராஜா, செயலாளா் அ.லாரன்ஸ் ரமேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.