உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் திங்கள்கிழமை நடப்பட்டன.
அந்தியூா் வனச் சரகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வனச் சரகா் க.உத்திரசாமி தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமையாசிரியை பொ.பானுமதி முன்னிலை வகித்தாா்.
வனத் துறை ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஒருங்கிணைந்து பள்ளி வளாகத்தில் 25 மரக்கன்றுகளை நடவு செய்தனா்.
மேலும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையைப் பாதுகாக்க மரக்கன்றுகள் நட்டு வளா்க்க வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.