பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் திங்கள்கிழமை கனமழை பெய்தது.
பெருந்துறையில் வழக்கம்போல திங்கள்கிழமை காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனா்.
மழையின் காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. மேலும், குளிா்ச்சியான காலநிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.