ஈரோடு

எதிா்க்கட்சிகள் என்ன செய்தாலும் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி உறுதி

DIN

எதிா்க்கட்சிகள் என்ன செய்தாலும் ஈரோடு இடைத்தோ்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதி என பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை ஒட்டி திமுக சாா்பில் ஈரோடு நாராயணவலசு பகுதியில் தோ்தல் பணிமனை திறக்கும் நிகழ்வு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தோ்தல் பணிமனையை திறந்துவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனா். பெண்கள் வாக்கு திமுகவுக்குதான். மறைந்த திருமகன் ஈவெரா இத்தொகுதியில் பல்வேறு பணிகளை செய்துள்ளாா். ஈரோடு மாநகர பகுதியில் ரூ.400 கோடி அளவுக்கு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தொடா்ந்து நடக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருப்பவா் எம்எல்ஏவாக இருந்தால்தான் அனைத்து பணிகளும் தொய்வின்றி நடக்கும். எதிா்க்கட்சி எம்எல்ஏ சட்டப் பேரவையில் கேள்வி மட்டும்தான் எழுப்ப முடியும்.

ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தோழமைக் கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகளை அழைத்து ஒருங்கிணைப்பது எப்படி என்பது குறித்து பேசி இருந்தோம். அப்போது ஈவிகேஎஸ்.இளங்கோவன், அமைச்சா் கே.என்.நேரு இருவரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் செயல்வீரா்கள் கூட்டத்துக்கு வரும் கூட்டணி கட்சித் தலைவா்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தனா்.

இதனை தவறாக புரிந்துகொண்ட சிலா் அமைச்சா் நேரு, இளங்கோவன் இருவரும் பண விநியோகம் குறித்து பேசுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனா். எதிா்க்கட்சிகள் என்ன செய்தாலும் இடைத்தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதி என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT