ஈரோடு

வரதநல்லூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

DIN

குடியரசு தினத்தையொட்டி பவானி ஊராட்சி ஒன்றியம், வரதநல்லூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். வரதநல்லூா் ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமி சிவபெருமாள், பவானி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பி.சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிச் செயலாளா் அம்பிகா வடிவேல் வரவேற்றாா். பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, அண்ணா மறுமலா்ச்சி திட்டம், குடிநீா் விநியோகம், சுகாதாரம், தூய்மை பாரதம் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்கள் பெறப்பட்டு, துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. பவானி வட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் மாரிமுத்து, கூட்டுறவு சங்கத் தலைவா் சித்தையன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT