சென்னிமலை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற கூட்டுறவு வங்கி காவலாளி உயிரிழந்தாா்.
சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூா், சென்னியங்கிரிவலசை சோ்ந்தவா் துரைசாமி (68). இவா் சென்னிமலையில் உள்ள கூட்டுறவு வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தாா். இவா், வீட்டிலிருந்து சென்னிமலைக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த லாரி துரைசாமி மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.