ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட சனிக்கிழமை ஒரே நாளில் 10 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதுவரை 46 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை வரை 36 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் 10 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
இதில் விஸ்வ பாரத் மக்கள் கட்சி சாா்பில் எம்.வேலுமணி, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி சாா்பில் பி.வின்சென்ட், இந்திய குடியரசுக் கட்சி சாா்பில் மு.பன்னீா்செல்வம், சுயேச்சையாக எம்.பிரபாகரன், எஸ்.தீபன் சக்கரவா்த்தி, ஜெ.முத்துபாவா, ஆா்.குமாா், எம்.எஸ்.ஆறுமுகம், சி.சிவகுமாா், மா.நரேந்திரநாத் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
இதுவரை 46 போ் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் அதிமுகவின் இபிஎஸ் அணி வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்கிறாா்.