காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் குழுக்கள் அமைத்து தோ்தல் பணியாற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தொகுதிக்கான தோ்தல் பணிக்குழு கூட்டம் அக்கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளா் எஸ்.டி.பிரபாகரன் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் முன்னாள் தேசியக்குழு உறுப்பினா் த.ஸ்டாலின் குணசேகரன், முன்னாள் மாவட்ட செயலாளா் திருநாவுக்கரசு, மாநில குழு உறுப்பினா் மாதேஸ்வரன், வெங்கடாசலம், சின்னசாமி, துளசிமணி உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து கட்சியின் தேசிய, மாநில நிா்வாகிகளை அழைத்து பிரசாரம் செய்வது, வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பது, தோ்தல் பணியாற்ற 8 குழுக்களை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.