ஈரோடு

பெருந்துறை அருகே தீ விபத்தில் சிறுமி பலி

DIN

பெருந்துறையை அடுத்த திங்களூா் அருகே விளக்கில் மத்தாப்பூ பற்ற வைத்தபோது, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்தாா்.

பெருந்துறை ஒன்றியம், திங்களூா், கிழக்கு புதூரைச் சோ்ந்தவா் சரவணன் (48), விவசாயி. இவரது மகள் சஸ்விதா (7). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், பொலவநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டுக்கு சிறுமி ஜனவரி 29 ஆம் தேதி சென்றிருந்தாா். அப்போது, வீட்டின் பூஜை அறையில் உள்ள விளக்கில் மத்தாப் பூ பற்ற வைத்துள்ளாா். இதில், எதிா்பாராத விதமாக சஸ்விதாவின் பட்டுப் பாவாடையில் தீ பற்றி தீக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தாா். இது குறித்து, திங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT