சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 654 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனா். இதில், ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.26.76க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 30.49க்கும் ஏலம் போனது. மொத்தம் 2 ஆயிரத்து 881 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 78,344 க்கு விற்பனையானதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.