ஈரோடு

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ராதாமணி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எஸ்.மணிமாலை பேசினாா். மாவட்டச் செயலாளா் எஸ்.சாந்தி, பொருளாளா் எம்.அமுதா உள்பட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் பங்கேற்றனா்.

அங்கன்வாடி மையங்களில் சமையல் எரிவாயு உருளைக்கான முழு தொகையை வழங்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 4 சமையல் எரிவாயு உருளைகளை அரசே ஏற்று வழங்க வேண்டும்.

காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பழுதடைந்த கைப்பேசிகளுக்கு பதிலாக புதிய கைப்பேசிகளை வழங்க வேண்டும்.

15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றொடொன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT