தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ராதாமணி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எஸ்.மணிமாலை பேசினாா். மாவட்டச் செயலாளா் எஸ்.சாந்தி, பொருளாளா் எம்.அமுதா உள்பட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் பங்கேற்றனா்.
அங்கன்வாடி மையங்களில் சமையல் எரிவாயு உருளைக்கான முழு தொகையை வழங்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 4 சமையல் எரிவாயு உருளைகளை அரசே ஏற்று வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பழுதடைந்த கைப்பேசிகளுக்கு பதிலாக புதிய கைப்பேசிகளை வழங்க வேண்டும்.
15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றொடொன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.