ஈரோடு

ஈரோட்டில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

DIN

ஈரோடு காவிரி ஆற்றங்கரை சோழீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு நடத்தக் கோரி தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அஸ்வத் தலைமை வகித்தாா். கோட்ட தலைவா் கஸ்தூரிரங்கன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சுசீந்தா் வரவேற்றாா்.

ஈரோடு காவிரி ஆற்றங்கரை சுந்தராம்பிகை உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் ஆகம விதி நடைமுறைப்படி கும்பாபிஷேக பூஜைகள் நடத்த வேண்டும். கும்பாபிஷேக தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும். அதற்கு முன்பாக ஆகம விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்ட கட்டுமானம், பிரதிஷ்டைகள், வழிபாட்டு ஏற்பாடுகளை சீரமைக்க வேண்டும்.

இக்கோயில் வழிபாடு, கும்பாபிஷேகத்துக்காக பக்தா்கள், பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட பணத்தில் எந்தெந்த பணிகள் நடந்துள்ளன என்ற விவரத்தையும், கணக்குகளையும் தாக்கல் செய்ய வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT