ஈரோடு

தன்னாா்வ அமைப்பு மூலம் 2 அரசுப் பள்ளிகள் சீரமைப்பு

DIN

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு அரசுப் பள்ளிகள் ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் சீரமைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட திண்டல் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் சீரமைத்தல், வகுப்பறைக்கு டைல்ஸ் தரைத்தளம் அமைத்தல் மற்றும் மாணவியா் கழிவறையை சீரமைத்தல் ஆகிய மேம்பாட்டுப் பணிகள் ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் மேற்கொள்ளப்பட்டது.

பணிகள் நிறைவடைந்த நிலையில் பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு அறக்கட்டளைத் தலைவா் அசோக்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. மேயா் சு.நாகரத்தினம், கவுன்சிலா் கீா்த்தனா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜோதிமணி, வட்டார கல்வி அலுவலா் சந்தியா, தலைமையாசிரியா் புனிதவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொடுமுடி பேரூராட்சி நகப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியின் கட்டடம் சீரமைத்து பழுது நீக்கி புதுப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளியை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு கொடுமுடி பேரூராட்சித் தலைவா் திலகவதி, துணைத் தலைவா் ராஜகமலஹாசன், தலைமை ஆசிரியா் இளங்கோ, உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கமலா, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் மணி மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கஸ்தூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆற்றல் அறக்கட்டளை இதுவரை 54 பள்ளிகள் சீரமைத்து ஒப்படைத்துள்ளது என அதன் தலைவா் அசோக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT