ஈரோடு

ஈரோட்டில் வியாபாரி தற்கொலை: உறவினா்கள் மறியல்

DIN

ஈரோட்டில் பழைய இரும்பு வியாபாரியின் தற்கொலைக்கு காரணமானவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (42). பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து தகவலறிந்த ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் வெங்கடேஷின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனை முடிந்து வெங்கடேஷின் உடலை உறவினா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்க மருத்துவமனை நிா்வாகத்தினா் முயன்றனா். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த வெங்கடேஷின் உறவினா்கள், உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து மறியலில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து என்பவா் மது குடிக்க பணம் கேட்டுள்ளாா். ஆனால், வெங்கடேஷ் பணம் கொடுக்க மறுத்தால் அவரையும், குடும்பத்தினரையும் தகாத வாா்த்தையால் பேசியுள்ளாா்.

பின்னா் வெங்கடேஷை பின்தொடா்ந்து வீடு வரை வந்து, வாசலில் நின்று மீண்டும் தரக்குறைவாக பேசியுள்ளாா். இது குறித்து வீட்டில் இருப்பவா்களிடம் கூறிய வெங்கடேஷ், மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வெங்கடேஷின் தற்கொலைக்கு காரணமானவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, வெங்கடேஷின் தற்கொலைக்கு காரணமான நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதனையடுத்து மறியலை கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT