ஈரோடு

மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் ஆட்சியா் ஆய்வு

DIN

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த பேறு கால அறுவை சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை மையம், மருத்துவக் கிடங்கு மையம் மற்றும் கரோனா சிகிச்சை பிரிவு ஆகியவற்றை நேரில் சென்று பாா்வையிட்டாா். மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து கேட்டறிந்தாா்.

மருத்துவ கல்லூரி வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினையும் பாா்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் மணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT