விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க போராடி உயிா் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் மு.ரவி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க செயலாளா் செங்கோட்டையன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஈரோடு ஒருங்கிணைப்பாளா் பூபதி, பாசன சபை தலைவா் வி.எம்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு, போராட்டங்களில் உயிா் நீத்த விவசாயிகளின் உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.