பெருந்துறை வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில், சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூா் ஊராட்சி, கொளத்துபாளையம் கிராமத்தில் சட்ட விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், வழக்குரைஞா் மோகன்பாபு பங்கேற்று, மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் மக்களுக்கு, மோட்டாா் வாகன சட்டம், அடிப்படை சட்டங்கள், வட்ட சட்ட பணிகள் குழுவின் செயல்பாடுகள், மனு எழுதும் முறைகள் பற்றி விளக்கவுரை ஆற்றினாா்.