ஈரோடு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் பலி

DIN

பவானி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.

ஈரோடு சித்தோடு லட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராஜன். இவரது மனைவி லலிதா (54).

தம்பதி இருவரும் நசியனூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். சித்தோடு சமத்துவபுரம்மேடு அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் நிலைத் தடுமாறியதில் பின்புறம் அமா்ந்திருந்த லலிதா கீழே விழுந்தாா்.

இதில், படுகாயமடைந்த அவா் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT