ஈரோடு மேட்டுக்கடை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் புங்கம்பாடி மின் பாதையில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: மேட்டுக்கடை, நத்தக்காட்டுபாளையம், புங்கம்பாடி, மேட்டுப்பாளையம், வண்ணான்காட்டுவலசு, ராசாம்பாளையம் மற்றும் சாலப்பாளையம்.