ஈரோடு

அகவிலைப்படி உயா்வை வழங்க அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை

DIN

ஜனவரி 1 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சங்கத்திந் ஈரோடு மாவட்டக் கிளை சாா்பில் கூட்டம் மற்றும் கருத்தரங்கம் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ.ராக்கிமுத்து தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் ச.விஜயமனோகரன் வரவேற்றாா்.

இதில் மாநில துணைப் பொதுச்செயலாளா் மு.சீனிவாசன் பேசியதாவது:

கடந்த 2003 ஜூலை 2ஆம் தேதி 1.76 லட்சம் அரசு ஊழியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா். சங்க நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா். எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யக் கூடாது. இனி போராட்டமே நடத்தக் கூடாது என அரசு எச்சரித்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியா் சங்கம் பல போராட்டங்களை நடத்தி கோரிக்கைகளை வென்றுள்ளது.

கடந்த ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும். கரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட சரண்டா் விடுப்பை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆா்.பி. செவிலியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சாலைப் பணியாளா்களின் பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து, அதற்கான ஊதியத்தை விடுவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு ஊழியா் சங்கம் தொடா் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT