நீலகிரி மாவட்டத்தில் மேலும் 416 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 416 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 44 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கக்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 38,416 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 36,043 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 223 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 2,150 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.