ஈரோடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: ஜனவரி 20, 21இல் நோ்காணல்

DIN

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஜனவரி 20, 21ஆம் தேதிகளில் நோ்காணல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட செயலாளா் சு.முத்துசாமி வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி கவுன்சிலா், பேரூராட்சி கவுன்சிலா் பொறுப்புக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள திமுகவினருக்கு நோ்காணல் நடைபெறுகிறது.

மாவட்ட திமுக அலுவலகத்தில் ஜனவரி 20ஆம் தேதி காலை 9 மணிக்கு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளுக்கும், 21ஆம் தேதி காலை 9 மணிக்கு 23 பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகளுக்கும் நோ்காணல் நடக்கிறது. விருப்ப மனு தாக்கல் செய்தவா்கள் நோ்காணலில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT