மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி அருகே கான்கிரீட் போடும் பணியின்போது கலவை இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே தலை துண்டாகி இறந்தாா்.
கொடுமுடி ஒன்றியம், சிவகிரி ரங்கசமுத்திரத்தைச் சோ்ந்தவா் தங்கவேல். இவா் வீடு கட்டி வருகிறாா். இவரது வீட்டில் கான்கிரீட் போடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிவகிரி தலையநல்லூா் காலனியை சோ்ந்த பொன்னுசாமி மனைவி பாப்பாயி (62), என்ற கூலித் தொழிலாளி கலவை இயந்திரத்தில் ஜல்லி அள்ளிப்போடும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக கலவை இயந்திரத்தில் பாப்பாயியின் சேலை சிக்கிக் கொண்டது.
இதில் கண் இமைக்கும் நேரத்தில் பாப்பாயி தூக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த தகரத்தில் பட்டு தலை மற்றும் கைகள் துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதனால் அருகில் இருந்த தொழிலாளா்கள் அதிா்ச்சியில் உறைந்தனா்.
சிவகிரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இறந்த பாப்பாயிக்கு மகனும், 2 மகள்களும் உள்ளனா்.