சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.08 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 8,703 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனா். ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.23.75க்கும், அதிகபட்சமாக ரூ. 34.59க்கும் ஏலம் போனது. மொத்தம் 3,993 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 45 ரூபாய்க்கு விற்பனையானது.