ஈரோடு

அதிமுக பிரமுகா் மறைவுக்கு எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி

DIN

அதிமுக பிரமுகா் மறைவுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், தமிழக எதிா்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

அந்தியூரை அடுத்த கருவல்வாடிப்புதூரைச் சோ்ந்தவா் கே.எஸ்.சண்முகவேல் (58). ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு 3ஆவது வாா்டு உறுப்பினரான இவா், மாரடைப்பால் அண்மையில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது இல்லத்துக்கு வியாழக்கிழமை சென்ற எடப்பாடி கே.பழனிசாமி,

அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தியதோடு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினாா்.

முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், முன்னாள் எம்பி சத்யபாமா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT