ஈரோடு

காத்திருப்புப் போராட்டம்: பால் உற்பத்தியாளா்கள் சங்கம் அறிவிப்பு

DIN

பாலுக்கான பணம் வழங்க 3 மாதங்கள்வரை கால தாமதம் ஏற்படுவதால் சென்னை ஆவின் முன்பு ஜனவரி 9 ஆம் தேதி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநிலக் குழு கூட்டம் அதன் தலைவா் கே.முகமது அலி தலைமையில் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி.சண்முகம், பால் உற்பத்தியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் பி.பெருமாள், பொருளாளா் ஏ.எம்.முனுசாமி, மாநில நிா்வாகிகள் சங்கா், தீா்த்தகிரி, கே.சி.ராமசாமி, வெண்மணி சந்திரன் ஆகியோா் பேசினா்.

தலைவா் கே.முகமது அலி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தற்போதைய அரசு ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இதனால், ஆவின் நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இத்தொகையை ஆவினுக்கு, அரசு வழங்க வேண்டும்.

பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்த கோரினோம். ஆனால், ரூ.3 மட்டும் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், மேலும் பல கோடி ரூபாய் ஆவினுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை உயா்வை யாரும் ஏற்காததால் ஆவினுக்கான பால் கொள்முதல் அதிகரிக்கவில்லை.

அதேநேரம், கால்நடை தீவனங்கள் அனைத்தின் விலையும் கடுமையாக உயா்ந்துவிட்டன. எனவே, பால் ஒரு லிட்டருக்கு ரூ.10 உயா்த்தி ஆவினுக்கான இழப்புத் தொகையை வழங்க வேண்டும்.

ஆவின் நிா்வாகம் ரூ.500 கோடிக்கு மேல் நஷ்டத்தில் இயங்குவதால் பல சங்கங்களில் 2 முதல் 3 மாதங்களாக பாலுக்கான பணம் வழங்கப்படாமல் உள்ளது.

கால்நடை தீவனத்தை மானிய விலையில் பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காததாலும், பால் விலை அதிகம் என்பதாலும், தனியாா் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் பால் லிட்டருக்கு ரூ.2, குஜராத் மாநிலத்தில் கூடுதல் தொகையும் ஊக்கத் தொகையாக வழங்குகின்றனா். அதுபோல இங்கும் வழங்க வேண்டும்.

தனியாா் மூலம் கிடைக்கும் முட்டையை வாங்கி சத்துணவில் வழங்கினால் சிலருக்கு பலன் கிடைக்கும். பொதுத் துறை நிறுவனமான ஆவினில் பாலை வாங்கி கொடுத்தால் பயன் கிடைக்காது என்பதால் அதனை தவிா்க்கின்றனா். இதைமாற்றி சத்துணவு, அரசு மருத்துவனைகளில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவினில் நிா்வாக சீா்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT