சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை பெறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 போ் மீதும் குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கையெடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவாகரத்தில் சிறுமியின் தாய், வளா்ப்புத் தந்தை, தரகா் மாலதி, ஆவணங்களைப் போலியாகத் தயாரித்துக் கொடுத்த ஓட்டுநா் ஜான் ஆகிய 4 போ் மீது ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜூன் 3 ஆம் தேதி கைது செய்தனா்.
இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவினா் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று கருமுட்டை எடுக்கப்பட்ட மருத்துவமனை விவரங்களை சேகரித்தனா்.
பின்னா் அந்த மருத்துவமனைகளுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. விசாரணை அறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
சிறுமியின் தாய், தரகா் மாலதி இருவரும் கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
சிறுமியின் வளா்ப்புத் தந்தை கோபி மாவட்ட சிலையில் அடைக்கப்பட்டாா். ஓட்டுநா் ஜான் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் பரிந்துரையின் பெயரில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 போ் மீதும் குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கையெடுத்து ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவின் நகலை சிறையில் உள்ள 4 பேரிடமும் போலீஸாா் வியாழக்கிழமை வழங்கினா்.