ஈரோடு

தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில ஊடகப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளா் ஜோதிகுமாரவேல் தலைமை வகித்தாா்.

இதில் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி காணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கடந்த 1972இல் கருணாநிதி ஆட்சியில் சட்டநாதன் குழு, 1985இல் எம்ஜிஆா் ஆட்சியில் அம்பாசங்கா் குழு ஆகியவை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக கருத்துகளை தெரிவித்தன. அந்த இரண்டு அரசுகளும் அறிக்கையை வெளியிடவில்லை.

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு அமல்படுத்தினால் தமிழா் அல்லாத ஜாதியினா் பாதிக்கப்படுவா் என்ற அச்சத்தால் குழு அறிக்கையை வெளியிடாமல் உள்ளனா். தமிழகத்தில் சுமாா் 2 கோடி வன்னியா்கள் உள்ளனா். எனவே 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளா் பழனிசாமி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT