ஈரோடு

பெருந்துறையில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணி

DIN

பெருந்துறையில் ரூ.24 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் பங்கேற்று புதிய திட்டப் பணிகளைத் துவக்கிவைத்தாா்.

இதில், பெருந்துறை ஒன்றியம், பள்ளா் வழுவு பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைத்தல், ஆயிக்கவுண்டம்பாளையத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல், திங்களூா் ஊராட்சி, நால்ரோடு பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி உள்ளிட்டவைகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில், பெருந்துறை ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ், விஜயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT