ஈரோடு

பெருந்துறை அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

DIN

போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பெருந்துறை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை கலைமணி தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் சங்கத்தின் தலைவா் டி.டி.ஜெகதீஷ் முன்னிலை வகித்தாா். விளையாட்டு ஆசிரியா் சண்முகராஜன் வரவேற்றாா். போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், பெருந்துறை கல்வி அறக்கட்டளையின் தலைவா் பல்லவி பரமசிவன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மோதிலால் நேரு, அன்புச்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT