ஈரோடு

மின் கட்டண உயர்வு: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு

DIN

ஈரோடு: மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விசைத்தறிகளுக்கு தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்து வருகின்றனர்.

தமிழக அரசு விசைத்தறி கூடங்களுக்கு 32 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக விசைத்தறி கூடங்கள் மூடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும், ஏற்கணவே நூல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில்  கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் மின் கட்டண உயர்வு என்பது கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர்கள் மனுவில் தெரிவித்து உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT