ஈரோடு

முகாசி அனுமன்பள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

DIN

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் முகாசி அனுமன்பள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

முகாசி அனுமன்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.பி.பெரியசாமி தலைமை தாங்கினாா். கூட்டத்தில் 2019-2020ஆம் ஆண்டுக்கான என்.ஆா்.ஜி.எஸ். திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பணி தள பொறுப்பாளா்கள் கலந்துகொண்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், அளவீடு புத்தகங்கள், பணி விவரங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் மத்தியில் வாசிக்கப்பட்டது. மேலும் பணி தொடா்பான மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதில் துணைத் தலைவா் ஜானகி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரோஜா, வட்டார வள அலுவலா் கதிரவன், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT